FILTERS:
SORT BY:
Clear All
ஒருவரை நீங்கள் சந்திக்கும் போது, உங்களின் இனிமை மிக்க பகுதி மட்டுமே அவர்களை தொட வேண்டும்.
அளவுக்கு அதிகமாக இருந்துவிட்டால் அது நல்ல வாழ்க்கை ஆகாது. நீங்கள் சேர்த்துக்கொள்ளும் ஒவ்வொன்றும் உங்களுக்குள் நீங்கள் வளம்பெற உதவ வேண்டும், நீங்கள் சிக்கிப்போகும்படி செய்யக்கூடாது.
வாழ்வின் நிச்சயமற்ற அம்சங்களை நீங்கள் விளையாட்டு போல கடக்க முடிந்தால்தான், வாழ்க்கையில் பூரிப்புடன் இருக்க முடியும்.
மனம் எனும் 'மகத்தான அதிசயம்', ஏராளமான மனிதர்களுக்கு 'துன்பதை உருவாக்கும் இயந்திரமாக' மாறிவிட்டது.
நீங்கள் புத்திசாலியான மனிதர் என்றால், ஒவ்வொரு படியிலும் வியப்புடன் இருப்பீர்கள். ஒரு முட்டாள்தான் எல்லாவற்றிலும் சர்வ நிச்சயமாக இருப்பார்.
வெற்றி என்பது எவ்வளவு என்ற அளவில் அல்ல. வெற்றி என்பது நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்ற தன்மைஆகும்.
நீங்கள் கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துவிட்டால், அதை தாண்டிப் போக வேண்டும் என்ற ஏக்கம் தானாகவே வரும் – உங்களின் மிகப்பெரிய பாக்கியம் அதுதான்.
தண்ணீர் என்பது உயிரை உருவாக்கும் பொருளாகும். நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது உயிரைக் காப்பது ஆகும்.
உங்களுக்கு நீங்களே துன்பத்தை உருவாக்கிக் கொள்வது, ஆதரவற்ற ஒரு குழந்தைக்கு துன்பம் தருவது போலதான். உங்களுடன் நீங்கள் போராடவும் முடியாது, உங்களிடமிருந்து நீங்கள் ஒடவும் முடியாது – துளியும் உங்களை காத்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பீர்கள்.
வாழ்க்கையில் நீங்கள் செய்து கொண்டிருப்பது எதுவாக இருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் அதை தேர்ந்தெடுத்தது நீங்கள்தான். இருப்பதிலேயே முக்கியமானது இதுதான் என்று அதை செய்யுங்கள் – அதுவே உங்கள் தியானம் ஆகிவிடும்.
உறவுகள் என்பது ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதோ, துணையாக இருப்பதோ அல்லது மற்றவரிடம் சந்தோஷத்தை தேடுவதோ கிடையாது. அது ஒரு மகத்தான சாத்தியத்திற்கு வழி வகுக்கும் 'சங்கமத்தை' உருவாக்கும் வாய்ப்பாகும்.
காட்டுக்குள் நேரம் செலவழிக்கும் போது, நீங்களும் இன்னொரு உயிர்தான் என்று புரிந்து கொள்வீர்கள். நமக்காக நாம் கொண்டிருக்கும் உணர்வுகளைப் போலவே சுற்றி இருக்கும் உயிர்களுக்காகவும் உணர்வுகள் கொண்டால், அது ஆன்மீகத்தில் ஒரு பெரிய படி ஆகும்.